புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2025

www.pungudutivuswiss.com
சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம்- மட்டு. மாநகர முதல்வரிடம் விசாரணை!
[Saturday 2025-08-09 07:00]


மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறு சிறையில் இருக்கும் பிள்ளையான்  அனுப்பிய கடிதம் தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம்  சிஜடி யினர்  விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பொது நூலகத்தை திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறு சிறையில் இருக்கும் பிள்ளையான் அனுப்பிய கடிதம் தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் சிஜடி யினர் விசாரணை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்

www.pungudutivuswiss.com
கிருமித் தொற்றினால் மாணவி மரணம்!
[Saturday 2025-08-09 07:00]


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (8) அதிகாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (8) அதிகாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

www.pungudutivuswiss.com
தமிழரசுக் கட்சியை சந்திக்கத் தயார்!
[Saturday 2025-08-09 07:00]

வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கையெழுத்திடாத நிலையில், அவர்கள் விரும்பும் பட்சத்தில் எதிர்வரும் வாரம் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தயாராக இருப்பதாக தமிழரசுக்கட்சியிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கையெழுத்திடாத நிலையில், அவர்கள் விரும்பும் பட்சத்தில் எதிர்வரும் வாரம் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தயாராக இருப்பதாக தமிழரசுக்கட்சியிடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

www.pungudutivuswiss.com
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அரியநேத்திரன் கடிதம்!
[Saturday 2025-08-09 07:00]


இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார

www.pungudutivuswiss.com
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் நல்லூருக்கு படையெடுத்துள்ள திருடர்கள்!
[Friday 2025-08-08 17:00]


நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

நல்லூர் திருவிழாவில் நகைகளை களவாட இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளமையால், ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்

பொரளை துப்பாக்கிச்சூடு- ஒருவர் பலி, மூவர் ஆபத்தான நிலையில்! [Friday 2025-08-08 17:00]

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
மார்க்கம் இடைத்தேர்தலில் களமிறங்குகிறார் கிள்ளி செல்லையா!
[Friday 2025-08-08 17:00]

கனடா- மார்க்கம் 7 ஆவது வட்டார இடைத் தேர்தலில் கிள்ளிவளவன் செல்லையா வேட்பாளராக  களமிறங்கவுள்ளார்.   அவரது பிரச்சார நடவடிக்கைகளுக்கான தேர்தல் பணிமனை   மார்க்கம் பகுதியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரச்சார ஆரம்ப நிகழ்வு பல மக்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கனடா- மார்க்கம் 7 ஆவது வட்டார இடைத் தேர்தலில் கிள்ளிவளவன் செல்லையா வேட்பாளராக களமிறங்கவுள்ளார். அவரது பிரச்சார நடவடிக்கைகளுக்கான தேர்தல் பணிமனை மார்க்கம் பகுதியில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரச்சார ஆரம்ப நிகழ்வு பல மக்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

www.pungudutivuswiss.com
அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும் மனநிலையில் அரசாங்கம் இல்லை!
[Friday 2025-08-08 17:00]


தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும் மனநிலையில் அரசாங்கம் இல்லை என  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும் மனநிலையில் அரசாங்கம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

www.pungudutivuswiss.com
மன்னார் காற்றாலை மின் திட்டத்தை இடைநிறுத்த முடிவு!
[Friday 2025-08-08 17:00]


மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குச் சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குச் சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

7 ஆக., 2025

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு - சிறிதரன் கேள்விக்கு நழுவிய நீதியமைச்சர்! [Thursday 2025-08-07 16:00]

www.pungudutivuswiss.com


கடந்த 14 வருடங்களிலிருந்து 30 வருடங்கள் வரை நீண்டகாலமாக  சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  தமிழ் கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வீர்களா என்று சிறீதரன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார்.  நாடாளுமன்றில் இன்று கேள்வி  நேர விவாதத்தின் போதே அமைச்சர் ஹர்சன நாணயகாரவிடம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

கடந்த 14 வருடங்களிலிருந்து 30 வருடங்கள் வரை நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்வீர்களா என்று சிறீதரன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று கேள்வி நேர விவாதத்தின் போதே அமைச்சர் ஹர்சன நாணயகாரவிடம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் சமர்ப்பிப்பு! [Thursday 2025-08-07 16:00]

www.pungudutivuswiss.com


முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

முன்னாள் ஜனாதிபதிகள் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூல வரைவு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை இரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரித்துரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது

மன்னார் காற்றாலை, மணல் அகழ்வுகளை நிறுத்தக் கோரி 15 எம்.பிக்கள் கடிதம்! [Thursday 2025-08-07 16:00]

www.pungudutivuswiss.com

மன்னாரில் மக்களுடைய எதிர்ப்புகளையும் மீறிய வகையில் அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அரசாங்கத்தால் அமைக்கப்படும் காற்றாலை மின்சார கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வு போன்ற திட்டங்களை நிறுத்த கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் மக்களுடைய எதிர்ப்புகளையும் மீறிய வகையில் அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அரசாங்கத்தால் அமைக்கப்படும் காற்றாலை மின்சார கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மண் அகழ்வு போன்ற திட்டங்களை நிறுத்த கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

6 ஆக., 2025

செம்மணிப் புதைகுழி அகழ்வில் நீதியமைச்சு அரசியல் தலையீடு! [Wednesday 2025-08-06 07:00]

www.pungudutivuswiss.com


செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சு கடுமையான முறையில் அரசியல் ரீதியாக தலையீடு செய்கின்றது. நீதி அமைச்சின் செயலாளர் அகழ்வில் ஈடுபடுவோருடன் நேரடித் தொடர்பில் இருக்கின்றார். தடயப்பொருட்கள் அடையாளப்படுத்தப்படும் இடத்தின் வாசலில் சி.ஐ.டி.யினர் அமர்ந்திருந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சு கடுமையான முறையில் அரசியல் ரீதியாக தலையீடு செய்கின்றது. நீதி அமைச்சின் செயலாளர் அகழ்வில் ஈடுபடுவோருடன் நேரடித் தொடர்பில் இருக்கின்றார். தடயப்பொருட்கள் அடையாளப்படுத்தப்படும் இடத்தின் வாசலில் சி.ஐ.டி.யினர் அமர்ந்திருந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றனர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

சான்றுப் பொருட்களை யாரும் அடையாளம் காணவில்லை! [Wednesday 2025-08-06 07:00]

www.pungudutivuswiss.com


செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர். எனினும் எவரும் எதனையும் அடையாளம் காட்டவில்லை என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்தனர். எனினும் எவரும் எதனையும் அடையாளம் காட்டவில்லை என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்

செம்மணியில் இதுவரை 141 எலும்புக்கூடுகள் அடையாளம்! [Wednesday 2025-08-06 07:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்தும் செவ்வாய்க்கிழமை (5) புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 04 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளில் இருந்தும் செவ்வாய்க்கிழமை (5) புதிதாக 06 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 04 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

5 ஆக., 2025

புலம்பெயர் தமிழர்களால் மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

www.pungudutivuswiss.com

வீடு புகுந்து தாக்கிய யானை- தாய் பலி, குழந்தை தப்பியது! [Tuesday 2025-08-05 07:00]

www.pungudutivuswiss.com


மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35 வயது இளம் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மூன்று வயது பெண் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.இந்த சம்பவம் நேற்று (04) இரவு நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35 வயது இளம் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மூன்று வயது பெண் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.இந்த சம்பவம் நேற்று (04) இரவு நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செம்மணியில் மேலும் பல எலும்புக்கூடுகள்- ஸ்கான் ஆய்வில் தெரியவந்தது! [Tuesday 2025-08-05 07:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கான் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த இடங்களில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கான் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு புதைகுழிகள் அடையாளப்படுத்தப்பட்டு அந்த இடங்களில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்க் கட்சிகள், சிவில் சமூகம் ஜெனிவாவுக்கு கடிதம்! [Tuesday 2025-08-05 07:00]

www.pungudutivuswiss.com


தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரிய சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதையும், அங்கு கண்டறியப்படும் மனித எச்சங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அகழ்வுப்பணிகளின்போது சர்வதேச கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன வழங்கப்படவேண்டும்.

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரிய சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதையும், அங்கு கண்டறியப்படும் மனித எச்சங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அகழ்வுப்பணிகளின்போது சர்வதேச கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகள் என்பன வழங்கப்படவேண்டும்.

4 ஆக., 2025

சட்டவிரோத தடுப்பு முகாம் இருந்ததை ஒப்புக்கொண்டார் அட்மிரல் உலுகத்தென்ன! [Sunday 2025-08-03 18:00]

www.pungudutivuswiss.com


திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருக்கும் ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலத்தடி சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு என்று முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருக்கும் ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலத்தடி சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு என்று முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் ஏற்றுக்கொண்டுள்ளார்

ad

ad