புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2014


அழகிரியின் முக்கிய ஆதரவாளர்கள் ஸ்டாலின் பக்கம் சென்றார்கள்:
 மதுரை திமுகவில் திடீர் பரபரப்பு
திமுகவுக்கு எதிராக செயல்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.  இதை அழகிரி கடுமையாக சாடினார்.  இதனால், அவர் மீது கட்சி தலைமை
ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.


இதையடுத்து திமுகவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.   இது கட்சி தலைமையை மேலும் மேலும் அதிருப்தியடைச்செய்துள்ளது.
மக்களவை தேர்தலில் திமுகவுக்கு எதிராக செயல்படுவேன், திமுக வேட்பாளர்களை தோற்கடிப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார் அழகிரி.  இந்த சந்தர்ப்பத்தில், பாஜக, மதிமுக வேட்பாளர்கள் அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். அழகிரியும்,  ஆதரவாளர்களிடம் ஆலோசித்து முடிவை சொல்கிறேன் என்று சொல்லிவருகிறார்.
அழகிரி திமுகவுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டுவருவதால், மீண்டும் திமுகவில் இணைய வாய்ப்பில்லையோ என அவரது ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.  இதனால், அவரது முக்கிய ஆதரவாளர்கள் 40 பேர் இன்று அதிரடி முடிவெடுத்துள்ளனர்.
எஸ்.ஆர்.கோபி உள்ளிட்ட 40 பேர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவரது ஆதரவாளர்களாக மாறிவிட்டார்கள்.   மக்களவை தேர்தலில் திமுக வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.
எஸ்.ஆர்.கோபியும் அவரது சகோதரர்களும், அழகிரியால் மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி சேர்மன் பதவி, அவனியாபுரம் நகராட்சி சேர்மன் பதவி, மற்றும் அவனியாபுரம் நகர செயலாளர் பதவி, திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர்  என பல்வேறு பதவிகளை அனுபவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad