மேலும் பொது தேர்தலை நடத்துவதற்கான அவசியமும் இல்லை. பொது தேர்தலை நடத்த போவதும் இல்லை. ஆனால் விரைவில் மாகாணசபைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர்களை பாராட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை அரசகரும மொழிகள் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போர்த்துக்கேயர் ஆட்சி புரிந்தப்போது யாழ்ப்பாண இராச்சியம் , கண்டி இராச்சியம், கோட்டை , சித்தாவக்கை என நாட்டில் பல்வேறு இராச்சிய பிரிவுகள் காணப்பட்டன. வேறப்பட்ட இராச்சியத்தை வெள்ளையர்களே ஒன்றுப்படுத்தினர். அந்த ஒருமித்த நிலை தொடர்ந்து நாட்டில் நிலவ வேண்டும்.
எனவே மொழிகளுக்கான முக்கியத்துவத்தை புரிந்து அவற்றுக்கு மக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கம் நிலையற்றது என்பதால் கிடைக்கபெரும் குறுகிய காலத்தில் தேசிய மொழிகளுக்கிடையில் ஒருங்கிணைவை ஏறபடுத்துவதற்கான அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.