மாணவர்கள், ஜெயலலிதா எதிர்ப்பு! வீரர்களை முடிவு எடுக்க சொன்ன இலங்கை கிரிக்கெட் வாரியம்!
சென்னை உட்பட இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று இலங்கை தமிழர்களுக்காக போராடி வரும் தமிழக மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீறி ஐபிஎல் போட்டியி
ல கலந்து கொண்டால் போராட்டங்கள் நடைபெறும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஐ.பி.எல்., தொடரில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது பற்றி வீரர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என