புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2013


மதுபோதையில் 9 வயது மகளை பாலியல் வல்லுறக்கு உட்படுத்தி அடித்துக் கொலை செய்த தந்தை கைது
யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிக்கு உப்பட்ட பகுதியில் தந்தையால் பாலியல் வல்லுறவுக்கு உட்படத்தப்பட்ட பின்னர் பெற்ற பிள்ளையை அடித்து கொலை செய்த

தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை வீட்டில் விளையாடிக் கெசாண்டு இருந்த தனது 9 வயது மகளை வலுக்கட்டயப்படுத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய
பின்னர் குறித்த சிறுமியை அடித்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
குறித்த சிறுமியின் பெண்குறி சிதைக்கப்பட்டுள்ளது. அத்தோடு தலை, கை கால் மற்றும் உடம்பின் பல பகுதிகளில் கீறல் காயங்களும் சுரண்டல் காயங்களும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் கடுமையான தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாகவே ரூபன் நிலாஞ்சினி (வயது 9)சிறுமி இறந்துள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் அவரது தந்தையை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள தந்தை தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சடலம் பரிசோதனைக்காக, சிறுமியின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ad

ad