இலங்கை கடற்படையினர் இன்று தென்பகுதி கடலில் அடைக்கலம் கோருவோர் எனக் கருதப்படும் 88 பேரைக் கைது செய்தனர்.
காலியில் இருந்து 220 மைல் கடல் தூரத்தில் படகு ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கையில் 88 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சி செய்திருக்கலாம் என நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் நாளை காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவர் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.