புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2013

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் நால்வரிடமிருந்து 26 தங்க கட்டிகள் மீட்பு
தங்கக் கட்டிகள் விழுங்கிய நிலையில் பயணிக்க முயற்சித்து கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் நான்கு பேரிடமிருந்து 26 தங்க கட்டிகள் மீட்டெடுக்கப்பட்டன.
இவர்களில் நான்கு பேரிடமே தங்கக்கட்டிகள் இருந்துள்ளன. இன்னும் 3 தங்க கட்டிகள் இருவரது வயிற்றில் உள்ளதாகவும் தொடர்ந்தும் இவர்கள் ஆஸ்பத்திரியில் இன்று மூன்றாவது நாளாகவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்க திணைக்கள பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
முதலாவது நபரின் வயிற்றில் 13 தங்கக் கட்டிகள் இருப்பதாக ஸ்கான் மூலம் தெரிந்த போதும் 15 தங்கக் கட்டிகள் வெளியே எடுக்கப்பட்டன.
இரண்டாவது நபரின் வயிற்றிலிருந்து 6 தங்க கட்டிகள் எடுக்கப்பட்டன.
மூன்றாவது நபரின் வயிற்றில்  5 தங்கக் கட்டிகள் இருப்பதாக தெரிந்த போதும் 6 தங்கக் கட்டிகள் வெளியே எடுக்கப்பட்டன.
நான்காவது நபரின் வயிற்றிலிருந்து ஒரு தங்க கட்டி மட்டுமே எடுக்கப்பட்டது.
ஏனைய மூவரிடம் வயிற்றினுள் தங்கக் கட்டிகள் இல்லை என்பதும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சுங்க பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

ad

ad