பிரபாகரன் படத்துடன் பானர் வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!- பழ.நெடுமாறன், காசி ஆனந்தன் மீது வழக்கு
உலக தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா நிகழ்வின் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்துடன் பானர் வைக்கப்பட்டிருந்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தஞ்சை முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் பிரபாகரன் படம் இடம்பெற்றதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.