புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு : ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு

1991 - 92ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஏப்ரல் 3ம் தேதி நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, வரும் ஏப்ரல் 3ம் தேதி குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா மற்றும் சசிகலா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அன்றைய தினம்,  குற்றச்சாட்டகள் பதிவு செய்யப்படும் என்றும் உத்தரவிட்டார்.

வருமான வரி கணக்கு பதிவு செய்யாத வழக்கை 4 மாதங்களுக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.1991 - 92ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஏப்ரல் 3ம் தேதி நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, வரும் ஏப்ரல் 3ம் தேதி குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா மற்றும் சசிகலா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அன்றைய தினம்,  குற்றச்சாட்டகள் பதிவு செய்யப்படும் என்றும் உத்தரவிட்டார்.
வருமான வரி கணக்கு பதிவு செய்யாத வழக்கை 4 மாதங்களுக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ad

ad