புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2014



இரண்டு கார்கள் நேருக்கு நேர்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் பலி! 


 

 
திருச்சி அருகே பஞ்சபுதூரில் இன்று (புதன்கிழமை) அதிகாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் கும்பகோணத்தில் வசித்து வருகிறார். குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக தனது மகன் ராஜ்குமார், மனைவி விஜயலட்சுமி, மாமனார் வெங்கடசாமி, உறவினர் மாடசாமி ஆகியோருடன் கண்ணன் காரில் சென்றார். காரை ரமேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார். இந்தக் கார் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சபுதூர் என்ற இடத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஒரு மணி அளவில் வந்தபோது கார் தனது கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பு சுவரில் மோதியதுடன், அச்சுவரை தாண்டி சென்றது.
அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி ஜனசக்தி பேப்பர் ஏற்றி வந்த இண்டிகா கார், கண்ணன் கார் மீது மோதியது. இந்த விபத்தில் கண்ணன், அவரது மகன் ராஜ்குமார், மாமனார் வெங்கடசாமி, உறவினர் மாடசாமி, எதிரே வந்த இண்டிகா காரில் இருந்த பிரதீப் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
இந்த விபத்தில் கண்ணன் மனைவி விஜயலட்சுமி, உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு கார் டிரைவர்களான ரமேஷ், நாகராஜன் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ad

ad