புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூலை, 2014


வடக்கு மாகாண சபையின் சட்ட மீளாய்வை நிராகரித்த ஆளுநர்
வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியின் மீளாய்வுக்காக வடக்கு மாகாண சபை வழங்கிய மாகாண சபை சட்டத்தை ஆளுநர் நிராகரித்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியின் மீளாய்வுக்காக வடக்கு மாகாண சபை வழங்கிய மாகாண சபை சட்டத்தை ஆளுநர் நிராகரித்துள்ளார்.
சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கே இருப்பதாக கூறியே ஆளுநர் அதனை நிராகரித்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை அவர் வட மாகாண சபைக்கு அனுப்பியுள்ளார்.
வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட வருமான வரி அறவீடு, முதலமைச்சருக்கான மானியம், முத்திரை வருமானம் ஆகிய வருமான வரிக்கான சட்ட அனுமதி மற்றும் மீளாய்வுக்காக மாகாண சபை அதனை கடந்த ஜூன் மாதம் 6 ஆம் திகதி ஆளுநருக்கு அனுப்பியிருந்தது.
வடக்கு மாகாண சபை அனுப்பிய இந்த சட்டத்தை ஆளுநர், சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்து ஆலோசனைகளை பெற்றுள்ளதுடன் அதனை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ad

ad