புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2014

டெல்லியில் உள்ள ஆ.ராசாவின் வீட்டிற்கு கனிமொழி சென்றதன் பின்னணி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு டெல்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.  தொலை தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராசா இந்த வழக்கில் நேற்று சாட்சியம்
அளித்தபோது,   ‘’டாடா குழும நிறுவனப் பணி தொடர்பாக, கம்பெனிகளின் முன்னாள் தரகர் நிரா ராடியாவும், டாடா குழுமங்களின் தலைவர் ரத்தன் டாடாவும், என்னை ஒரு முறை என் வீட்டில் சந்தித்தனர்.  இப்படி, நிரா ராடியாவை ஒரு முறையோ அல்லது இரு முறையோ, ரத்தன் டாடாவுடன் சந்தித்துள்ளேன். அதன்பின், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திலும், வனத்துறை அமைச்சகத்திலும், அவர் என்னை சில நிமிடங்கள் சந்தித்துள்ளார்.  நிரா ராடியாவுடன், நான் தொலைபேசியில் பேசினேனா என்பது எனக்கு நினைவில்லை. ராடியா என்னை அடிக்கடி சந்தித்திருந்தாலும், நான் அவரை தொலைபேசியில் அழைத்துப் பேசியிருக்க வாய்ப்பு இல்லை.  ஒரு நேயர் என்ற முறையில், கலைஞர், ‘டிவி’யைப் பற்றி எனக்குத் தெரியும். அதன் பங்குதாரர்கள் குறித்து எல்லாம் எனக்குத் தெரியாது. ‘டிவி’யை யார் துவக்கினர் என்பதும், அதன் நிர்வாகி யார் என்பதும் எனக்குத் தெரியாது.  தி.மு.க.,வின் ராஜ்யசபா உறுப்பினர் என்ற முறையில், மற்ற எம்.பி.,க்களுடன் டெல்லியில் உள்ள என் வீட்டிற்கு கனிமொழி வந்துள்ளார். கலைஞர், ‘டிவி’ தொடர்பாக, ராடியா மற்றும் கனிமொழி உடன், நான் தொலைபேசியில், எந்த விதமான உரையாடலும் மேற்கொள்ளவில்லை.  தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, பல நிறுவனங்களுக்கு நான் ஒப்புதல் அளித்துள் ளேன். அதனால், யுனிடெக் நிறுவனத்திற்கு, நிர்வாக ரீதியாக அளிக்கப்பட்ட ஒப்புதல்களை, என்னால் நினைவுபடுத்த முடியவில்லை’’என்று கூறினார்.

ad

ad