புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2014

தமிழர்களது போராட்டத்தை யாருமே நிராகரிக்க முடியாது:மாவை எம்.பி
news
தமிழர்களது போராட்டத்தை யாருமே நிராகரிக்க முடியாது ஏனென்றால் தமிழர்களது போராட்டத்தில் நியாயம்,நேர்மை இருப்பதாக தமிழரசுக் கட்சியின்  தலைவரும்,நாடாளுமன்ற  உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இன்று காலை 9மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு யாழ்.மாவட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு,கிழக்கு மக்களின் குடிப்பரம்பலை அழித்து விடவேண்டும் என்பதே அரசின் கடந்த ஐந்தாண்டு கால கூடுதலான எதிர்பார்ப்பாக இருக்கின்றது. போர் முடிவுற்று 5ஆண்டு காலப்பகுதியிலே  அரசினால்அதிகளவான பிரச்சினைகள் எழுந்துள்ளதுடன் தமிழ் மக்களின் நிலத்தையும்,இனத்தையும் அழிக்கும் நடவடிக்கையே அரசு மேற்கொண்டு வருகின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அடுத்த முகங்களால் தமிழரசுக் கட்சிக்கு எதிராக கூக்குரல் கிளம்புகின்றது.புதிய இரத்தங்கள் கட்சிக்குள் உட்பாய்ச்சப்படுமானால் அதுவும் பொருத்தமானதாகவே  இருக்கும்.
நாம் எமது நிலங்களுக்கு நட்டஈடு கேட்கவில்லை.எமது நிலம் எமக்கே வேண்டும் என்றே கேட்கின்றோம்.ஆனால் அரசு தமிழர் வாழும் மண்ணில் சிங்களவர்களை அனுமதிக்கின்றனர்.இராணுவத்தை குடியேற்றுகின்றனர்.இவ்வாறான 
செயல்களினால் தமிழினம் அழிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களது போராட்டத்தை யாருமே நிராகரிக்க முடியாது ஏனென்றால் நமது போராட்டத்தில் நியாயம்,நேர்மை உண்டு.அதனால் தான் சர்வதேசமே நம்பக்கம் ஆதரவாக இருக்கின்றது.எனவே தன்னாட்சியை நாம் நிலைநாட்ட வேண்டும்.ஆகவே தமிழ் மக்களை இன்னொரு அழிவுக்குள் கொண்டு செல்லாமல் தமிழ் மக்களின் நிலத்தையும்,இனத்தையும் பாதுகாக்க வேண்டும்.
மேலும் எனக்கு மாலை,பொன்னாடைகள் அணிவித்து வரவேற்பது முக்கியம் அல்ல எமது தமிழ் மக்கள் இரத்தத்தை 
எங்கள் மேலே சொறிந்தார்கள்  அதுதான் உண்மையான வரவேற்பு எனவும் அவர் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=164353421912868464#sthash.feZiq9Z3.dpuf
பொட்டு அம்மான் கைது என்பதில் உண்மையில்லை! இறந்தவரின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை: இராணுவப்பேச்சாளர்
[ வெள்ளிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2014, 01:22.32 AM GMT ]
விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
ஏற்கனவே இறுதிப்போரின் போது இறந்து விட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் கூறப்பட்ட பொட்டு அம்மான்,  தற்போது ஹொங்கொங்கில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று இலங்கை இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.
இது நிதிச்சேகரிப்புக்காக விடுதலைப்புலிகளின் அனுதாபிகளால் பரப்பப்பட்ட செய்தியாகும் என்றும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் இறுதிப்போரில் பொட்டு அம்மான் கடும் காயங்களுக்கு உள்ளானமையை சரணடைந்த விடுதலைப்புலிகளின் தகவல்படி, இராணுவம் உறுதி செய்துள்ளது.
எனினும் இறந்து விட்டதாக கூறப்படும் அவரின் உடலை தாம் கண்டுபிடிக்கவில்லை என்று இராணுவப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
தமிழரசுக்கட்சியின் புதிய தலைவருக்கு யாழில் வரவேற்பு
news
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு யாழ்.மாவட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முதலில் யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத் தூபிக்கு தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட மாவை. சேனாதிராஜா மலர் மாலை அணிவித்தார்.

அதன் பின்னர் யாழில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் கிளை அலுவலகத்திலிருந்து மாவை. சேனாதிராஜா அழைந்துவரப்பட்டார்.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான சிவஞானம், ஆனோல்ட்,கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=889503421612474927#sthash.R85dfI2h.dpuf
அம்மா திட்டங்களை அறிவிப்பதால் மட்டும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட முடியாது: வைகோ கண்டனம்

நாள்தோறும் அம்மா திட்டங்களை அறிவிப்பதால் மட்டும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட முடியாது என்பதை புரிந்துகொண்டு, விவசாயம் தொழில்துறை, மின்சார உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.  

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 12.09.2014 வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும், பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பை ஏற்றவருமான ரகுராம் ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சிறப்பு உரிமை கோரும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பல்நோக்குக் குறியீடு (Multi Dimentional Index -MDI) மதிப்பீட்டின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதை நோக்கமாகக் கொண்டு இக்குழு உருவாக்கப்பட்டது.

ரகுராம் ராஜன் குழுவின் ஆய்வு அறிக்கை 2013, செப்டம்பர் 26 இல் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. கடந்த அறிக்கையில் இநதியாவில் மிகவும் வளர்ச்சி அடைந்த 7 மாநிலங்களின் பட்டியலில் கோவா, கேரளாவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு இருந்ததாகவும், பஞ்சாப், மராட்டியம், உத்ரகாண்ட், ஹரியானா போன்றவை இதர வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது மத்திய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள பொருளாதார வளர்சசி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு கடைசி இடைத்தை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. 2013, செப்டம்பரில் ரகுராம்ராஜன் குழு அறிக்கையில், பீகார் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், மத்திய புள்ளியியல் நிறுவனம், பீகார் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 10.73 விழுக்காடு என்றும், தமிழகம் 3.39 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளதாக கூறுகிறது.

2011-12 இல் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.39 விழுக்காடு இருந்தது. 2012-2013 இல் 3.39 விழுக்காடு என்று வீழ்ச்சி அடைந்துவிட்டது. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), சேவைத்துறை 45 விழுக்காடு, தொழில்துறை 34 விழுக்காடு, விவசாயத்துறை 21 விழுக்காடு பங்களிப்பை அளிக்கின்றன. முதன்மை துறையாக உள்ள விவசாயத்துறை கடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. உற்பத்தித் துறையும் சரிந்துவிட்டது.

கடந்த மூன்றாண்டு காலமாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டால், விவசாயத்துறை மட்டுமின்றி தொழில்துறையும் பாதிக்கப்பட்டது. தென் இந்தியாவின் மான்செÞடர் கோவையில் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் முதல் பத்து மணி நேரம் மின்வெட்டு. இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாயின. கடந்த மூன்று ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அங்கு தொழிற்துறை உற்பத்தியை இழந்தது.

இந்திய மனித வளர்ச்சி குறியீட்டு எண் மதிப்பீட்டில் முதல் மூன்று மாநிலங்களில், பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும், மூன்றாம் இடத்தில் கேரளாவும் இருக்கின்றன. மனித வளம் சிறப்பாக உள்ள தமிழ்நாடு, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது.

பயிரிடப்படும் நிலங்களின் பரப்பளவு குறைந்துகொண்டே போவதும், நல்ல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதைத் தடுத்தும், நீர் ஆதாரங்களைப் பெருக்க ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், முறையாக தூர்வாரியும் வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அத்துறையை வளர்க்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு உடனுக்குடன் தீர்வு காணவேண்டும். உற்பத்தி தொழில்துறை வளர்ச்சிக்கு அரசின் பங்களிப்பை ஆதிகரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம் 1.27 இலட்சம் கோடி ரூபாயில், இலவச திட்டங்களுக்கு மட்டும் 250 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. இதற்கான நிதி ஆதாரத்தைத் திரட்ட மதுக்கடைகளை தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. ஜெயலலிதா அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளும், நாள்தோறும் அம்மா திட்டங்களை அறிவிப்பதாலும் மட்டும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட முடியாது என்பதை புரிந்துகொண்டு, விவசாயம் தொழில்துறை, மின்சார உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அம்மா திட்டங்களை அறிவிப்பதால் மட்டும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட முடியாது: வைகோ கண்டனம்

நாள்தோறும் அம்மா திட்டங்களை அறிவிப்பதால் மட்டும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட முடியாது என்பதை புரிந்துகொண்டு, விவசாயம் தொழில்துறை, மின்சார உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.  

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 12.09.2014 வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும், பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பை ஏற்றவருமான ரகுராம் ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. சிறப்பு உரிமை கோரும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பல்நோக்குக் குறியீடு (Multi Dimentional Index -MDI) மதிப்பீட்டின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்வதை நோக்கமாகக் கொண்டு இக்குழு உருவாக்கப்பட்டது.

ரகுராம் ராஜன் குழுவின் ஆய்வு அறிக்கை 2013, செப்டம்பர் 26 இல் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது. கடந்த அறிக்கையில் இநதியாவில் மிகவும் வளர்ச்சி அடைந்த 7 மாநிலங்களின் பட்டியலில் கோவா, கேரளாவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு இருந்ததாகவும், பஞ்சாப், மராட்டியம், உத்ரகாண்ட், ஹரியானா போன்றவை இதர வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது மத்திய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள பொருளாதார வளர்சசி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு கடைசி இடைத்தை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. 2013, செப்டம்பரில் ரகுராம்ராஜன் குழு அறிக்கையில், பீகார் மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், மத்திய புள்ளியியல் நிறுவனம், பீகார் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 10.73 விழுக்காடு என்றும், தமிழகம் 3.39 விழுக்காடு மட்டுமே வளர்ச்சியை எட்டியுள்ளதாக கூறுகிறது.

2011-12 இல் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.39 விழுக்காடு இருந்தது. 2012-2013 இல் 3.39 விழுக்காடு என்று வீழ்ச்சி அடைந்துவிட்டது. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), சேவைத்துறை 45 விழுக்காடு, தொழில்துறை 34 விழுக்காடு, விவசாயத்துறை 21 விழுக்காடு பங்களிப்பை அளிக்கின்றன. முதன்மை துறையாக உள்ள விவசாயத்துறை கடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. உற்பத்தித் துறையும் சரிந்துவிட்டது.

கடந்த மூன்றாண்டு காலமாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டால், விவசாயத்துறை மட்டுமின்றி தொழில்துறையும் பாதிக்கப்பட்டது. தென் இந்தியாவின் மான்செÞடர் கோவையில் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் முதல் பத்து மணி நேரம் மின்வெட்டு. இதனால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாயின. கடந்த மூன்று ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அங்கு தொழிற்துறை உற்பத்தியை இழந்தது.

இந்திய மனித வளர்ச்சி குறியீட்டு எண் மதிப்பீட்டில் முதல் மூன்று மாநிலங்களில், பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும், மூன்றாம் இடத்தில் கேரளாவும் இருக்கின்றன. மனித வளம் சிறப்பாக உள்ள தமிழ்நாடு, பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது.

பயிரிடப்படும் நிலங்களின் பரப்பளவு குறைந்துகொண்டே போவதும், நல்ல விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதைத் தடுத்தும், நீர் ஆதாரங்களைப் பெருக்க ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், முறையாக தூர்வாரியும் வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அத்துறையை வளர்க்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு உடனுக்குடன் தீர்வு காணவேண்டும். உற்பத்தி தொழில்துறை வளர்ச்சிக்கு அரசின் பங்களிப்பை ஆதிகரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் ஆண்டு வருமானம் 1.27 இலட்சம் கோடி ரூபாயில், இலவச திட்டங்களுக்கு மட்டும் 250 கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. இதற்கான நிதி ஆதாரத்தைத் திரட்ட மதுக்கடைகளை தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. ஜெயலலிதா அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளும், நாள்தோறும் அம்மா திட்டங்களை அறிவிப்பதாலும் மட்டும் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட முடியாது என்பதை புரிந்துகொண்டு, விவசாயம் தொழில்துறை, மின்சார உற்பத்தி மற்றும் சேவைத்துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ad

ad