புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

மகிந்தாவை விட்டு ஓடும் அமைச்சர்கள்..! ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.! ஏக்கத்தில் மகிந்தா..?

ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த், கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் இன்று காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளனர்.

இவர்களில் கெஹலிய தவிர ஏனைய இருவரும் எதிர்வரும் இரண்டொரு நாட்களுக்குள் கட்சி தாவ சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்களோடு மேலும் பல அமைச்சர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறக் காத்திருப்பதாக கூறப்படுகின்றது

அமைச்சர் ராஜித சேனாரத்தின சற்று முன்னர் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது

ad

ad