புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2014

ஜெயலலிதா வழக்கில் சிக்கும் பாஜக புள்ளிகள்: உளவுத்துறை அதிரடி

ஜெயலலிதா வழக்கில் சம்பந்தப்பட்ட பாஜக தலைவர்கள் யார் என்பது குறித்து உளவுத்துறை ரிப்போர்ட் தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டபோது, அரசு வழக்கறிஞராக ஆஜரானவர் பி.வி.ஆச்சாரியா.
இவர் ஜெயலலிதா தரப்புக்கு எதிராக தீவிரமாக வாதங்களையும், ஆதாரங்களையும் எடுத்து வைத்து வழக்கின் போக்கையே நேர் கோட்டுக்கு கொண்டு வந்தவர்.
இந்நிலையில் கர்நாடகாவில் சதானந்தகவுடா தலைமையிலான பாஜக அரசு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆச்சாரியாவுக்கு பாஜக தலைவர்களிடமிருந்து நெருக்கடி வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில்ஆச்சாரியா வெளியிட்ட அவரது சுய சரிதை புத்தகத்தில் அதுகுறித்து தெரிவித்துள்ளார்.
நெருக்கடி அதிகரித்த நிலையில் அரசு வழக்கறிஞர், பதவியையே ஆச்சாரியா ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவானது.
அதன்பிறகுதான் அரசு வழக்கறிஞர் பவானிசிங் நியமிக்கப்பட்டார். அவர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடியதாக நீதிபதியாலே குற்றம்சாட்டப்பட்டு அபராத விதிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்த நிகழ்வுகளை வைத்து பார்க்கும்போது, ஆச்சாரியா குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கருதும் மத்திய அரசு, உளவுத்துறை மூலம் உண்மை தகவல்களை உறுதிப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது.
உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், ஆச்சாரியாவை குறிப்பிட்ட காலகட்டத்தில் யார் யார் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர், யாரெல்லாம் அவரை நேரில் சந்தித்து பேசினர் என்பது போன்ற தகவல்களை சேகரித்துள்ளனர்.
அதில் கர்நாடக பாஜக தலைவர்கள், டெல்லி பாஜக தலைவர்கள் சிலரது பெயர் சிக்கியுள்ளது.
தமிழக பாஜகவை சேர்ந்த சில பிரமுகர்களும் அப்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஆச்சாரியாவுக்கு நெருக்கடி தர முனைந்ததும் உளவுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ad

ad