- ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில், அந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துள்ள அரசமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவு பாதுகாக்கப்படும் என உறுதி அளிக்குமாறு பாஜகவிடம் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) கேட்டுள்ளது.
இதுதொடர்பாக
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நயீம் அக்தர், ஸ்ரீநகரில் பிடிஐ செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறியதாவது:
அனைத்து உபாயங்களும் எங்கள் கட்சியிடம் உள்ளது. பிற கட்சியுடன் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக எந்த முடிவையும் எங்கள் கட்சி இன்னும் எடுக்கவில்லை.
பாஜகவுடன் கூட்டணி சேர்வது உள்பட மாநிலத்தில் ஆட்சியமைப்பது வரையிலான அனைத்து வழிமுறைகள் குறித்தும் பிடிபி தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது.
எங்கள் கட்சிக்கு என்று, சில விவகாரங்கள் தொடர்பாக சில நிலைப்பாடுகள் உள்ளன. அவற்றை ஏற்பதாக எந்தக் கட்சி வாக்குறுதி அளிக்கிறதோ, அந்தக் கட்சியுடனே எங்களது கட்சி கூட்டணி வைக்கும்,