புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2014


அவுஸ்திரேலியா வெற்றி 
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையில் பிரிஸ்பேர்ண் மைதானத்தில் நடைபெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக் கெட்டுகளால் வெற்றிபெற்றது.

மூன்றாவது நாள் ஆட்ட முடி வின்போது ஒரு விக்கெட்டை இழ ந்து 71 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்திய அணி, 224 ஓட்டங்களைப் பெற்றவேளையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

எனவே, அவுஸ்திரேலிய அணிக்கு 128 என்ற இலகுவான வெற்றி இலக்கு அமைந்தது. ஆயினும் ஆடுகளத்தின் தன்மையை நன்கு பயன் படுத்திக்கொண்ட இஷான் சர்மா, சிறப்பாகப் பந்துவீசி அவுஸ்தி ரேலிய அணியை சிறிது தடுமாற்றத்துக்குள்ளாக்கினார்.

24ஆவது ஓவர் பந்துவீசப்பட் டுக்கொண்டிருந்த வேளையில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை அடைந்தது.

கிறிஸ் ரோஜர்ஸ் 55 ஓட்டங்களையும் ஸ்டீபன் சுமித் 28 ஓட்டங்க ளையும் பெற்றனர். இஷான் சர்மா 3 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீபன் சுமித் தெரிவானார். 

ad

ad