திரிஷாவுக்கும், வருண்மணியன் இருவருக்கும் வரும் ஜனவரி 23 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும், உறவினர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடை
பெற உள்ளது. இந்நிலையில் நிச்சயதார்த்தத்திற்கான வேலைகள் விரைந்து நடந்து வருகின்றன.த்ரிஷாவுக்கு , வருண் மணியன் நிச்சயதார்த்த பரிசாக ரோல்ஸ் ராய்ஸ் கார் அன்பளிப்பாக அளிக்க உள்ளதாக செய்திகள் பரவின. இதற்கு பதில் சொல்லும்விதமாக, வருண்மணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் நிச்சயதார்த்த பரிசு குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
நிச்சயம் ஆன வாரத்தின் இறுதி நாட்களில் 1000 கணக்கான விலங்குகளுக்கு உணவு அளிக்கப் போவதாக வருண்மனியன் ட்வீட் செய்துள்ளார். "இந்த பரிசு ரோல்ஸ் ராய்ஸ் காரை விட மேலானது என த்ரிஷாவுக்கு தெரியும்!" என ட்வீட் செய்ய, த்ரிஷா அதை ரீட்வீட் செய்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் அந்த விலங்கினங்கள் நிரந்தரமாக தங்கும் வகையில் இடம் ஒன்றையும் அமைத்துக் கொடுக்க இருக்கிறாராம். த்ரிஷா ஒரு விலங்குகள் பிரியை என்பதால் இந்த பரிசைத் தரவிருக்கிறாராம் வருண் மணியன்.
நிச்சயதார்த்த நாளில் ஹேரி வின்ஸ்டன் மோதிரமும் அதாவது 4.5 கேரட் வைரம் பொருத்திய ப்ளாட்டினம் மோதிரம், மற்றும் நீடா , நிஷ்கா என்ற மும்பை ஃபேஷன் வடிவமைப்பாளர்கள் தயாரித்த சேலையும் , மற்றும் பார்ட்டியில் ஆஸ்கர் டி லா ரெண்டாவின் வடிவமைப்பில் பார்ட்டி கவுனும் அணிய உள்ளார்.