உலகின் எந்த இடத்திலும் இலங்கையர்கள் அகதிகளாக வாழக்கூடாது என்றும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள்
போராளிகளும் இலங்கைக்கு திரும்பி வந்தால், அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது எனவும் சமரவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இணைய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், உண்மையான தேசிய நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அவர்களின் பங்களிப்பும் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.