புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2015

மைத்திரி- மகிந்த- சந்திரிக்கா ஆகியோரை கூட்டிணைக்கும் பணி ஆரம்பம்


ஜனாதிபதி மைத்திரிபால, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகிய மூவரையும் எதிர்வரும் பொது தேர்தலில் ஒரே மேடைக்கு கொண்டு வந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியை மீண்டும் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீலிக்ஸ் பெரேராவின் இல்லத்தில் நேற்று முன்தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கம்பஹா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதிகள் மூவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்து கட்சியின் ஒற்றுமை சகோதரத்துவம் மற்றும் பிரிவினைகளின்றி கட்சியின் அதிகாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக காணப்பட்டது என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
குரோதங்கள் இன்றி குழந்தைகள் போல ஒற்றுமையாக இருப்பதே தமது நோக்கம் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், நடைமுறையிலுள்ள மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளை தானே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ad

ad