புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2015

கார்த்தி சிதம்பரம் ஆம் ஆத்மியில் சேர்ந்து கொள்ளட்டும்: ஈ.வி.கே.எஸ்.


 ப.சிதம்பரத்தின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி ப. சிதம்பரம் விரும்பினால் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் அமோக வெற்றிக்குப் பிறகு கார்த்தி ப. சிதம்பரம் தனது டுவிட்டரில், “நமக்கு நம்பகமான தலைவர் தேவை மற்றும் பல படிப்பினைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள இளங்கோவன், “காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகளில் கெஜ்ரிவாலைப் போன்ற ஒரு தலைவரை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக ஆம் ஆத்மி அனுமதித்தால் அக்கட்சியில் சேர்ந்து கொள்வதே நல்லது” என தெரிவித்துள்ளார்.

ad

ad