புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2015

கோத்தபாய மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இரண்டுமணி நேரமாக விசாரணை: வாக்குமூலம் பதிவு

இராணுவப் புரட்சிக்கு முயற்சித்தமை, இரகசிய ஆயுதக் களஞ்சியசாலை நடத்தியமை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய  ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை காவல்துறை ஊடகப் பிரிவு இதுவரை வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவப் புரட்சிக்கு முயற்சிகளை மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய இருவரையும் விசாரணை செய்வதற்கான ஆலோசனையை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து பெறுவதற்கு காத்திருப்பதாக காவல்துறை நேற்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக கொழும்புத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ad

ad