புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2015

சு.க.விலுள்ள ஏனையவர்கள் எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ள போதும், ஏனைய சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர் க்கட்சியில் இருந்துகொண்டு அரசுக்கு ஆதரவு வழங்குவார்கள் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி  தெரிவித்தார்.

புதிய அமைச்சர்கள் பதவியேற் றமை தொடர்பாகக் கேட்டபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். 11 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 5 இராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச் சர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். தாம் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்குத் தீர்மானித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் உள்ளிட்ட ஏனையவர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொள் ளாவிட்டாலும், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியில் இருக்கும் அவர்கள் அரசாங்கம் விடும் பிழைகளைச் சுட்டிக் காட்டும் அதேநேரம், முக்கியமான திட்டங்களுக்கு அரசாங்கத்துக்கு ஆத ரவளித்துச் செயற்படுவார்கள் என் றும் அமைச்சர் பெளசி மேலும் கூறி னார்.

ad

ad