புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஏப்., 2015

16 படகுகளுடன் தமிழகம் திரும்பியது மீட்புக்குழு

தமிழக மீனவர்களின் 52 படகுகள் கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.
எனினும் இதில் 16 படகுகளை மாத்திரமே தமிழக மீனவர்களால் தமது நாட்டுக்கு எடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 52 படகுகளும் விடுவிக்கப்பட்டு விட்டதாக பிழையான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை அதிகாரிகள் குறித்த படகுகளை எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 86 இந்திய படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் 34 படகுகள் தமிழக மீனவர்களால் எடுத்துச் செல்லப்பட்டன.
இந்தநிலையிலேயே 52படகுகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தன.
இதில் 16 படகுகளே கடந்த புதன்கிழமை விடுவிக்கப்பட்டு தமிழகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

ad

ad