புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2015

ருநகர் தொடர் மாடியிலிருந்து விழுந்து குடும்பஸ்தர் சாவு

அளவுக்கதிகமான மதுபோதை காரணமாக குருநகர் தொடர் மாடியில் இருந்து வீழந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம்
பொலிஸார் தெரிவித்தனர்.


இச் சம்பவத்தில் 33 வயதான மரியதாஸ் பிங்ரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தெரி வருவது,  மனைவி மற்றும் பிள்ளைகள் மடுவுக்கு சென்றுள்ளனர். இந் நிலையில் அதிக மதுபானம் அருந்திய இவர் 40 அடி உயரம் உள்ள நான்காவது மாடியின் பின் பக்கமாக குதித்துள்ளதாக சம்பவத்தை கண்டவர்கள் பொலிஸாருக்கு    தெரிவித்தனர்.

அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தினால், அவர் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது என மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மரண விசாரணையினை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ad

ad