புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2015

அவர்கள் ஊடகங்களோடு பேச மாட்டார்கள்! ஊடகவியலாளர்களை வெளியேற்றிய விநாயகத்தின் உறவினர்கள


அவர்கள் ஊடகங்களோடு பேச மாட்டார்கள். பேச வேண்டாம் என மேல் இடத்தின் உத்தரவு நீங்கள் வெளியே செல்லுங்கள் என தமீழ விடுதலை புலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவு முக்கியஸ்த்தர் விநாயகத்தின் உறவினர்கள் ஊடகவியலாளர்களை வெளியேற்றியுள்ளனர். 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்படி முக்கியஸ்த்தரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கை புலனாய்வு பிரிவினால் யாழ்.வரணி பகுதியில் கொண்டுவந்து விடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில்,
அவர்கள் எங்கிருந்தனர்?  எப்படி வந்தனர்? என்பன போன்ற விடயங்கள் சரியாக தெரியாத நிலை நீடிக்கிறது.
இந்நிலையில் அவர்கள் தடுப்பு முகாமில் இருந்தனர் எனவும் புலனாய்வு பிரிவினால் கொண்டுவந்து விடப்பட்டனர். எனவும் தகவல்கள் உலாவுகின்றன.
குறித்த விடயம் தொடர்பான உண்மை நிலையை அறிய யாழ்.ஊடகவியலாளர்கள் சிலர் வறணி பகுதியில் உள்ள அவர்களது வீட்டுக்கு சென்றனர்.
எனினும் அங்கிருந்த உறவினர் ஒருவர் அவர்கள் ஊடகங்களுடன் பேச மாட்டார்கள். மேலிடத்தின் உத்தரவு என கூறியபடி வீட்டு கதவை மூடிச் சென்றுள்ளார்.

ad

ad