புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 டிச., 2015

ஜெயலலிதா ஆட்சியில் முதல்முறையாக அமைச்சர்கள் பிரஸ்மீட் நடந்துவிட்டதே? கழுகார் பதில்கள்!

Vikatan EMagazine's photo.

மழை எத்தனையோ விஷயங்களை வெளியில் கொண்டு வந்துவிட்டது. நிர்வாகம் ஒழுங்காக இல்லை, இதுவரை போடப்பட்ட சாலைகள் ஒழுங்காக இல்லை, நீர்நிலைகளை ஒழுங்காகப் பராமரிக்கவில்லை... இப்படி பல விஷயங்களை வெளியில் கொண்டுவந்து காட்டிவிட்டது மழை. ஓர் அரசாங்கம் 

மெளனிக்கும்போது மக்கள் அதனைச் செய்து முடிப்பார்கள் என்ற மக்களின் மனிதாபிமானமும் வெளியில் வந்துவிட்டது. அப்படித்தான் அமைச்சர்களும் வெளியில் வந்துவிட்டார்கள்.அமைச்சர்களும் அதிகாரிகளும் நான்கரை ஆண்டு காலத்தில் முதல் தடவை நிருபர்களைச் சந்திப்பதால், அவர்களுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதே தெரியவில்லை. நிருபர்களின் கேள்விகளுக்கே பதில் சொல்லாமல் எதையோ சொல்கிறார்கள். கேள்வி கேட்டாலே பிடிக்கவில்லை. பிரஸ் மீட் என்று சொல்லிவிட்டு, ‘எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது’ என்று கிளம்புகிறார்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்த நிருபர்களுக்கு இதையெல்லாம் பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்துள்ளது.thx vikatan

ad

ad