புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜன., 2016

கால்பந்து வீரர்களுடன் பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து! 20 பேர் பரிதாப பலி


மெக்சிகோவில் கால்பந்து வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் வெராக்ருஸ் மாநிலத்தில் உள்ள அடோயக் நகராட்சியில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து அடோயக் ஆற்றில் கவிழ்ந்துள்ளது.
இந்த பயங்கர விபத்தில் அதில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 10 பேர் காயமடைந்துள்ளனர்.
குழந்தைகள் உட்பட உள்ளூர் போட்டிக்குச் செல்லும் கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களை அந்த பேருந்து ஏற்றிச் சென்றதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் படி ஓட்டுனரின் அதிவேகத்தால் காட்டுப்பாட்டை இழந்தே பேருந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad