புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 பிப்., 2016

கட்டுநாயக்கவில் காணி வாங்கிய புலிகள்! ஏன் தெரியுமா?

விமானங்கள் மீது தாக்குதல் நடாத்த தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கவில் காணி கொள்வனவு செய்திருந்தனர் என சிங்கள பத்திரிகையொன்று
செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் காணியொன்றை புலிகள் கொள்வனவு செய்திருந்தனர்.
தாக்குதல் நடத்தப்பட்டு பல ஆண்டுகளின் பின்னரே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த காணி பற்றிய விபரங்களை திரட்டிய பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், அதனை அரசுடமையாக்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் காணி பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளார். எனினும், இந்த விபரங்கள் இரகசியமாகவே காணப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னரும் காணி பற்றிய தகவல்கள் அம்பலமாகியிருக்கவில்லை என சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது

ad

ad