புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2016

அதிமுக - பாஜகவுக்கு விவாகரத்து நடக்கவில்லை : பொன்.ராதாகிருஷ்ணன்


 
 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக  சூசகமாக தெரிவித்துள்ளார். 

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நெல்லை மாவட்டம் தென்காசியில் செய்தியாளர் களிடம் பேசியபோது,   ‘’வலுவான கூட்டணியை பாஜக அமைக்கும்’’என்றார்.  அதிமுக-வுடன் கூட்டணி இருக்குமா என்ற கேள்விக்கு தங்களுக்குள் விவாகரத்து நடக்கவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார். 

இதன் மூலம் அதிமுக-வுடன் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். அத்திக்கடவு - அவினாசி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு எந்த வகையில் உதவ வேண்டுமோ அந்த வகையில் உதவும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

மத்திய அரசு மீது நம்பிக்கை வைத்து மக்கள் இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அரசு ஊழியர்களும் தற்போதைய நிலையை எண்ணி பார்த்து வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று அவர் வலியறுத்தினார்.

ad

ad