புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2016

தலையில்லாத உடலை வாங்க மறுத்து நடந்த மறியல் போராட்டம்



சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளிகளான ஆறுமுகசாமி , கண்ணன் இருவரும் ஒரு கும்பலால் நேற்று முன் தினம் படுகொலை செய்யப்பட்டனர்.  இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் கண்ணனின் உடல் அவரது சொந்த ஊரான பழையகாயலுக்கு கொண்டு செல்லப்பட்டது. 

 ஆறுமுகசாமியின் உடலை பலத்த பாதுகாப்போடு நெல்லை மாவட்டம் இடையதவணை கிராமத்திற்கு போலீசார் கொண்டு வந்தனர்.  அப்போது, அவரது உடலில் தலை இல்லாமல் வெறும் உடல் மட்டுமே இருப்பதுகண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  அவரது தந்தை மாடசாமி மற்றும் கிராமத்தினர் தலையில்லாத உடலை வாங்க மாட்டோம் என்று மறுத்தனர்.  அந்த உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டம் நடத்தினர்.  

 அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம்  டிஎஸ்.பி சங்கு அவரிடம் பேச்சுவார்துதை நடத்தினார். தலை இல்லாத உடலை அடக்கம் செய்யப்போவதில்லை என்று கூறினர்.   போலீசார் அவர்களிடம் பேசியும் பலனில்லை.  இறுதியில் இரவு 10 மணிக்கு மேல் ஆறுமுகசாமியின் தலையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு கொண்டுவந்தனர்.  இரவு 11 மணி வாக்கில் தலை கிடைத்த பிறகே கிராமத்தினர் உடலை அடக்கம் செய்தனர்.

ad

ad