புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2016

ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி - சுப்ரமணிய சாமி

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும் என்றும், ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி என்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஜிகாதி தீவிரவாத அமைப்புகள் அதிகரித்துவிட்டதாகவும், அவற்றை ஒடுக்குவதில் மாநில அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இந்த விஷயத்தில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்றும் சுப்ரமணியன் சாமி குறிப்பிட்டார். 

ad

ad