உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக வேட்பாளராக ராமமூர்த்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அங்கு போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து பாமக வேட்பாளர் ராமமூர்த்திக்கு பதிலாக பாமகவின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான பாலு உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுவார் என்று பாமக அறிவித்துள்ளது.
திமுக சார்பில் இத்தொகுதியில் திருநாவலூர் ஒன்றிய செயலாளரான ஜி.ஆர்.வசந்தவேல் அறிவிக்கப்பட்டுள்ளார். வசந்தவேலை விட பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்தவும் திமுக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அ.தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. குமரகுரு மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.