புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2016

மாதா மாதம் ஓட்டுக்கு லஞ்சம்… ஊழல்வாதிகளாக மாற்றப்பட்டவர்களின் ஆதார ரிப்போர்ட்!

மாதா மாதம் ஓட்டுக்கு லஞ்சம்… 

ஊழல்வாதிகளாக மாற்றப்பட்டவர்களின் 
ஆதார ரிப்போர்ட்!

 
‘ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்காதீர்கள்;வாங்காதீர்கள்’ என்பது தேர்தல் நேரங்களில் உலாவரும் விழிப்புணர்வு பிரச்சாரம். ஆனால், ஓட்டுக்காக தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல... ஆட்சிகாலங்களிலேயே லஞ்சம் கொடுத்து மக்களை ஊழல்வாதிகளாக மாற்றி வைத்திருக்கிறார்கள் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் என்பது ஆதாரப்பூவர்மாக அம்பலமாகியிருக்கிறது. இதனால், பறக்கும்படை மட்டுமல்ல, மு(எ)ப்படைகளையும் வைத்து  முயற்சித்தாலும் ஓட்டுக்கு லஞ்சத்தை தடுக்கமுடியாது என்பதுதான் உண்மை!  எப்படி?

        தமிழகத்தில்...இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதியத் திட்டம், இந்திராகாந்தி மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம், இந்திராகாந்தி விதவைகள் ஓய்வூதியத்திட்டம், ஆதரவற்ற மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத்திட்டம், கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத்திட்டம்,  50 வயதினை எட்டியும் வசதி வாய்ப்பு இல்லாததால் திருமணம் ஆகாமல்-  உழைக்கும் திறனற்ற  ஏழை பெண்களுக்கான ஓய்வூதியத்திட்டம், முதல்மைச்சர் உழவர் பதுகாப்புத்திட்டம் என 8 விதமான மத்திய-மாநில அரசுகளின் ஓய்வூதியத்திட்டங்களின் மூலம் மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகையானது, பயனாளி உயிரோடு இருக்கும்வரை வழங்கப்பட்டுவருகிறது. ஆனால், ஆதரவற்ற, வறுமைகோட்டுக்கு கீழுள்ள இத்திட்டத்தின்கீழ் உண்மையாகவே பயனடையவேண்டிய ஏழைகள் பலர் இன்னமும் உதவித்தொகை கிடைக்காமல் தினம் தினம் அரசு அலுவலங்களுக்கு நடையாய் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நக்கீரன் தொடர்ந்து எழுதிவருகிறது. ஆனால், உதவித்தொகை பெற தகுதியான ஏழைகளுக்கெல்லாம் கொடுக்காமல் கோடிக்கணக்கில் சொத்து இருப்பவர்கள், சொந்த வீடு வைத்துக்கொண்டு வசதியுடன் வாழ்பவர்கள், வாடகைக்கு வீடுவிட்டு சம்பாதிப்பவர்கள், கணவன் இறப்பதற்கு முன்பே விதவைகள் பென்ஷன், மத்திய-மாநில அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்று பென்ஷன் வாங்கிக்கொண்டிருப்பவர்கள், இதையெல்லாம் தாண்டி போலீஸ் குடியிருப்பில் உள்ளவர்கள், நீதிபதிகளின் குடியிருப்புகளில் உள்ளவர்கள்...அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ளவர்கள் (ஒருவேள அவங்களே முதியோர் பென்ஷன் வாங்குறாங்களோ?!!)      என போலியாக பலரும் இத்திட்டத்தின்கீழ் மோசடியாக சேர்க்கப்பட்டு மாதாமாதம் உதவித்தொகை என்கிற பெயரில் லஞ்சம் பெற்றுவருவது டாக்குமெண்ட் எவிடென்ஸோடு கிடைக்க நமது கண்கள் ஸூம் ஆகி ஹார்ட் பீட் எகிறியது. நமக்கு கிடைத்த அந்த போலி பயனாளிகளின் பட்டியல் இதோ...


    1)சென்னை எம்.ஜி.ஆர். நகர் சக்திவினாயகர் கோயில் தெருவை சேர்ந்த பி.சி.புஷ்பா. இவரது கணவர் ஐயப்பன் மத்திய அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றதால் மாத பென்ஷனே சுமார் 15,000 ரூபாய்க்கு மேல்வருகிறது. மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். கடந்த மே 2014-ல் 1200 சதுர அடி நிலத்தை  1 கோடியே 2 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யும் அளவுக்கு வசதி படைத்தவர். இவரது மகன் தலைமை செயலகத்தில் ஹோம் டிபார்ட்மெண்டில் பணிபுரிகிறார். ஆனால், கணவர் இறந்ததாக கடந்த 2001 அக்டோபர் 1-ந்தேயிலிருந்து விதவைகளுக்கான மாத உதவித்தொகையை பெற்றுவருகிறார். ஒவ்வொரு பயனாளிகளுக்கும் மாதாமாதம் பணம் அனுப்புவதற்காக ஓர் அக்கவுண்ட்டை மெயிண்டெய்ன் பண்ணுகிறது அரசாங்கம்.  பி.சி.புஷ்பாவின் அக்கவுண்ட் நம்பர்-15818

     இத்திட்டங்களின்கீழ் ஒருவர் விண்ணப்பிக்கும்போது அது உண்மையா பொய்யா என்று ஆராய்ந்து வழங்கவேண்டிய முக்கியப்பொறுப்பு ட்ரிபுள் எஸ்வட்டாட்சியர் எனப்படும் சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தாருக்குத்தான் உண்டு. அப்படிப்பார்த்தால் இந்த பெண்மணிக்கு மோசடியாக வழங்கிய தனி தாசில்தாரின் பெயர் எஸ். சரோஜா.
 
         2)வெங்கடேச சுப்பையா. சென்னை கே.கே.நகர் அசோகா காலனியிலுள்ள எம்-11,பி- ஹைடெக்கான ஃப்ளாட்டில் வசிக்கிறார். ஆனால், 2012 டிசம்பர்-1 ந்தேதியிலிருந்து இந்திராகாந்தி முதியோர் உதவித்தொகையை வாங்கிக்கொண்டிருக்கிறார். இவரது அக்கவுண்ட் நம்பர்- 48220. இவரது மோசடிக்கு துணையாக இருந்த தனி தாசில்தார் எஸ்.சரோஜா.

         3) சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த மணியம்மாளுக்கு வயது 44. ஆனால், நகைச்சுவை என்னவென்றால்  2001 அக்டோபர்-1 ந்தேதியிலிருந்து முதியோர் உதவித்தொகை (60 வயது நிரம்பியிருக்கவேண்டும்) வாங்கிவருகிறார். மணியம்மாளின் அக்கவுண்ட் நம்பர்-14490.  இவரது மோசடிக்கு துணையாக இருந்த தனி தாசில்தார் அ.மணி.

          4) சென்னை எம்.ஜி.ஆர். நகரில் சொந்த வீட்டில் வசிக்கும் வி.கே.சுகுமாறனுக்கு  த்ரீ ஃபேஸ்  மின் இணைப்பு உள்ளது. மாதம், 11,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாய்க்குமேல் கரண்ட் பில் கட்டுகிறார். ஆனால், ஆதரவற்றவர் என்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் என்றும் முதியோர் உதவித்தொகையை வாங்கி வருகிறார்.

          5) சென்னை எம்ஜி.ஆர். நகர் மார்க்கெட்டில் பெஸ்ட் பிஸ்கட் ஸ்டால் என்கிற பெயரில் பேக்கிரி வைத்திருக்கும் நாராயணனுக்கு தரைதளம், முதல்தளம், இரண்டாவது தளம் என சொந்தமாக 4 வீடுகள் உள்ளன. தான், வசிப்பதுபோக மீதமுள்ள வீட்டை வாடகை விட்டு அதிலும் வருமானம் வருகிறது.  மாதம், சுமார் 10,000 ரூபாய்க்குமேல் கரண்ட் பில் கட்டுவதோடு ஆவின் பால், நெய் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் முகவராக உள்ளார். மேலும், ஒரு துணிக் கடையை வாடகைக்கு விட்டிருக்கிறார். ஆனால், இவரும் முதியோர் உதவித்தொகை வாங்கிக்கொண்டிருக்கிறார்.

          6) எம்.ஜி.ஆர். நகர்,  சக்திவினாயகர் கோயில் தெரு ராதா. இவரது கணவர் அரிதாஸ் சென்னை போர்ட்டில் பணிபுரிந்து ஓய்வுபெற்றதால் அவருக்கான மத்திய அரசுப்பணி ஓய்வூதியம் வந்துகொண்டிருக்கிறது. மேலும் சுய உதவிக்குழுவை நடத்தி அதிலும் வருமானம் பார்க்கிறார். ஆனால், இவரும் தன்னை ஒரு ஏழை என்று சொல்லிக்கொண்டு 2009 அக்டோபர்-1-ந்தேதியிலிருந்து விதவைக்கான உதவித்தொகையை பெற்றுவருகிறார்.

             7)  நம்பர்-70, அன்னை சத்யா தெருவை சேர்ந்த சபாபதிக்கு தரை தளம், முதல் தளம் என 600 சதுர அடியில் சொந்தமாக வீடு உள்ளது. முதல் தளத்தை வாடகைக்கு விட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, 2010-ல் சுமார் 4 லட்ச ரூபாயில் டாடா மேஜிக் வாகனம் வாங்கி (வண்டி எண்- டி.என்-09 பி.இ. 1216) ஸ்கூல் சவாரி, ரோடு சவாரி என இரண்டுவிதமாக ஓட்டி வருமானம் பார்ப்பதோடு பணி ஓய்வூதியத்தையும் பெற்றுவருகிறவர் ஏழைகளுக்கு கொடுக்கப்படும் முதியோர் பென்ஷனையும் வாங்கிவருகிறார். இவரது மோசடிக்கு துணையாக செயல்பட்ட தனி தாசில்தான் வெள்ளிங்கிரி.

             8) நம்பர்-14/25, எம்.ஜி.ஆர். நகர் பாலைத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் கொத்தவால் சாவடியிலிருந்து மாற்றப்பட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள  எஃப்/ பி-43 பூக்கடைக்கு உரிமையாளர் இவர். இவரது மகளும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வாங்கிவருகிறார். மேலும், இவர் பெயரில் ஒரு ஆட்டோவும் (டி.என் - 09 க்யூ, 9051)  ஓடுகிறது. ஆனால், 2004 ஜூலை-1 ந்தேதியிலிருந்து 52 வயதிலிருந்தே முதியோர் உதவித்தொகை வாங்கிவருகிறார். இவரது அக்கவுண்ட் நம்பர்-23596.  இவரது மோசடிக்கு துணையாக செயல்பட்ட தனிதாசில்தார்  நாகராஜன்.  
    
           9) அனகாபுத்தூர், 5, கஸ்தூரிபா நகரை இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் வரலட்சுமி.  1991- அக்டோபர்-10 ந்தேதியிலிருந்து  ஆலந்தூர் நகராட்சியாக இருக்கும்போது 16,577 ரூபாய் சம்பளத்தில் துப்புறவு பணியில் சேர்ந்தவர். ஆனால், எஸ்.பி. சாலையில் வசிப்பதுப்போல செம்மஞ்சேரியிலுள்ள தமிழ்நாடு ஹவுசிங் போர்டில்(கதவு எண்:10 ப்ளாக் வி.எல்-1) 2015 மார்ச் 28-ந்தேதி வீடு வாங்கியுள்ளார். மகள் ரேணுகாவுக்கும் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதிலும் கோல்மால் பண்ணிவிட்டு... இவ்வளவு வருமானத்தை பெற்றுவருகிற வரலட்சுமி,  தன்னை ஒரு ஏழை என்று விதவை பென்ஷனையும் வாங்கி வருகிறார். இவரது மோசடிக்கு துணையாக செயல்பட்ட தனிதாசில்தார் புண்ணியகோட்டி.  


10) எம்.ஜி.ஆர். நகர், 52/79  அன்னை சத்யா நகரில் முனுசாமிக்கு சொந்தமாக வீடு உள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒயர்மேனாக வேலைபார்த்தவர். அதற்கான, பென்ஷனை ஒரு பக்கம் வாங்கிக்கொண்டு 2009 ஜூலை 1 ந்தேதி முதல் முதியோர் பென்ஷனையும் வாங்கிவருகிறார்.

இவரது மோசடி துணையாக செயல்பட்ட தனிதாசில்தார் பிரேமா.


11) மணிமேகலை. 19/1  கே.ஆர். ராமசாமி சாலை, எம்.ஜி.ஆர் நகரில் வசித்துவரும் இப்பெண்மணியின் கணவர் மத்திய அரசிலிருந்து ஓய்வுபெற்றதால் 15,000 ரூபாய்க்குமேல் பென்ஷன் வருகிறது. ஆனாலும் 1981-லிருந்து விதவை பென்ஷன் வாங்குகிறார். இவரது அக்கவுண்ட் நம்பர் 10847.

 12) சென்னை கே.கே. நகரிலுள்ள மாநகர போக்குவரத்துக்கழ டிப்போவில் பணிபுரிந்த காண்டீபன் 2013-ல் உயிரிழந்துவிட்டார். அவருக்கான பென்ஷனை வாங்கிவரும் மனைவி சரஸ்வதி, தமிழக அரசின் முதியோர் உதவித்தொகையையும் பெற்றுவருகிறார்.  இவரது அக்கவுண்ட் நம்பர்- 6218426235.

13) ஜாஃபர்கான்பேட்டை,  நம்பர்- 53, அன்னை சத்யா முதல் தெருவில் வசித்தவர் கருப்பையா. இவர், 2007 டிசம்பர் 1-ந்தேதியிலிருந்து முதியோர் பென்ஷன் வாங்கிவருகிறார். ஆனால், இதில் செம கூத்து.  இந்த கருப்பையாவின் மனைவி பரிமளாவோ தனது கணவர் இறந்துவிட்டதாக 2002 பிப்ரவரி-1 ந்தேதியிலிருந்தே அதாவது ஐந்து வருடங்களுக்கு முன்பிலிருந்தே விதவை பென்ஷன் வாங்கிவருகிறார். இவர்களது மோசடிக்கு துணையாக இருந்த தனி தாசில்தார்  ஜெயபாண்டியன்.


  *அதேபோலத்தான்,  எம்ஜிஆர் நகர், நம்பர்-9, ராஜசோழன் தெருவிலுள்ள கணவர் புஷ்பநாதன் 2012 நவம்பர்-1-ந்தேதியிலிருந்து முதியோர் பென்ஷன் வாங்கிக்கொண்டிருக்கிருக்க  இவரது மனைவி தேவிகாவோ 2011 டிசம்பர்-1 ந்தேதியிலிருந்து அதாவது ஒரு வருடத்துக்கு முன்பிலிருந்தே விதவை பென்ஷன் வாங்கியிருக்கிறார்.

இவர்களது மோசடிக்கு துணையாக செயல்பட்ட தனிதாசில்தார்கள் சரோஜா, ராமேஸ்வரி கணபதியம்மாள்.


14) மல்லிகா,  கணவரால் கைவிடப்பட்டவர் என்று சொல்லிக்கொண்டு அதற்கான உதவித்தொகையை பெற்றுவருகிறார். ஆனால், விசாரித்தால்  எம்.ஜி.ஆர். நகர், நம்பர்-5, மருதன் தெருவில் ஒன்றாகத்தான் வசிக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

15) எம்.ஜி.ஆர். நகர், நம்பர்-7, கலைவாணர் தெருவில் வசிக்கும் கோமதி, கணவர் முருகன் இறந்துவிட்டதாக விதவைகள் பென்ஷனை வாங்கிவருகிறார். ஆனால், இவரது கணவர் முருகன் உயிரோடுதான் இருக்கிறார் என்கிறார்கள்.

16) கமலா, எம்.ஜி.ஆர். நகர், நம்பர்- 36/72- பம்மல் நல்லத்தம்பி தெருவை சேர்ந்த இவரது கணவர் அரசு மருத்துவமனையிலிருந்து ஓய்வுபெற்றதற்கான பென்ஷன் வருகிறது. மகன், தேசியவங்கியில் உதவி மேனேஜராக நல்ல சம்பளத்தில் பணிபுரிகிறார். மாதம் 5,000 ரூபாய்க்கு மேல் கரண்ட் பில் கட்டுவதோடு 4 வீட்டிற்கான வாடகை வருகிறது. ஆனால், இவரோ முதியோர் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றுவருகிறார். இவரது மோசடிக்கு துணையாக செயல்பட்ட தனி தாசில்தார் சரோஜா.


17)அதே பம்மல் நல்லத்தம்பி தெருவை சேர்ந்த சமுசுகனி, மும்தாஜ், ஆசியா மரியம், முகம்மது யூசூப்,  என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் ஆதரவற்றவர்கள் என்கிற பெயரில் முதியோர் உதவித்தொகை பெற்றுவருகிறார்கள். ஆனால், இவர்கள்  அனைவரும் அடிக்கடி,  டூரிஸ்ட் விசாவில் செளதிக்கு சென்று வரும் அளவுக்கு வசதி படைத்தவர்கள். இவர்களது மோசடிக்கு துணையாக செயல்பட்ட தனி தாசில்தார்  சாந்தா.
 

18) சென்னை கோடம்பாக்கத்தில் பணிபுரிந்துகொண்டிருப்பவர் பத்மா. அதற்கான ஈ.எஸ்.ஐ.கார்டும் உள்ளது.  48,000 ரூபாய்க்கான ஆண்டு வருமான சான்றிதழை கிண்டி-மாமலம் தாசில்தார் அலுவலகமே வழங்கியிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் ஆராயாமலேயே இவருக்கு 2006 நவம்பர்-1 -ந்தேதியிலிருந்து விதவை பென்ஷன் வழங்கப்பட்டுவருகிறது. இவரது மோசடிக்கு துணையாக செயல்பட்ட தனி தாசில்தார் மாதவி.
 

19) மத்திய அரசின் ஃபுட் கார்ப்பொரேஷன் ஆஃப் இண்டியா பணியில் இருப்பவர் அன்பழகன். இவரது ஈ.எஸ்.ஐ.கார்டிலும் இவரது தாய் ராஜம்மாளின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆனால், தாயோ ஆதாரவற்றவர் என்கிற பெயரில் முதியோர் உதவித்தொகை வாங்கிவருகிறார்.
 
20) எம்.ஜி.ஆர். நகர்,  நம்பர்-94, தந்தை பெரியார் தெரு சகுந்தலா.  கணவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்று அதற்கான பென்ஷன் வருவதோடு மகனுக்கும் பி.எஸ்.என்.எல்-ல் வேலை கிடைத்துள்ளது.  ஆனால், இவரும்  விதவை பென்ஷன் வாங்கிவருகிறார்.

                 இதைவிடக்கொடுமை…. சம்பளம் பாதி கிம்பளம் பாதி என எக்கச்சமான வருமானம் குவிக்கும் போலீஸ் குடியிருப்பில் இருந்துகொண்டே தங்களை ஆதரவற்றவர்கள்/ வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள்/ ஏழைகள் என்று சொல்லி தமிழக அரசின்  ஓய்வூதிய உதவித்தொகை மோசடியாக வாங்கி வருபவர்களின் பட்டியல் இதோ…

     
1)சரோஜா ராமன் (3098 IGNOAPS 4631 ) ஏ-2 எழும்பூர் போலீஸ் குடியிருப்பில் வசித்துக்கொண்டு முதியோர் உதவித்தொகை பெற்றுவருகிறார்.

 

2) சுரேஷ் (17528 DDAP 1000 ) 1, ஏ ப்ளாக், நியூ போலீஸ் குடியிருப்பு. கிரீம்ஸ்ரோடு, சென்னை-6


3) தவுலத் பீவி பட்டுநாக்கீர்(16906 IGNWPS 3343) திடீர் நகர் போலீஸ் குடியிருப்பு, ஆயிரம் விளக்கு, சென்னை-6
 

4) ருக்மணி (13843 DWP 11474) பி-18 போலீஸ் குடியிருப்பு,  ஐஸ் ஹவுஸ், திருவெல்லிக்கேனி, சென்னை-6

5) வினோ ராணி பங்காரு பாபு  (8006 IGNWPS 261)  நம்பர்- 20, டி-3 போலீஸ் குடியிருப்பு, டாக்டர் பெசண்ட் ரோடு, சென்னை-5

 

6) பாக்கிய லட்சுமி முனுசாமி (8007 IGNWPS 262)   நம்பர்-20, டி-3 போலீஸ் குடியிருப்பு, டாக்டர் பெசண்ட் ரோடு, சென்னை-5
 

7) திருவேங்கடம் (7329 IGNOAPS 7666)  நம்பர்- 8 சி, டி-3 ஐஸ் ஹவுஸ் போலீஸ் குடியிருப்பு, திருவெல்லிக்கேணி-5

8) ராசன் ராமசாமி (6835 IGNOAPS 5217)  நம்பர்- 20/ சி டி-3 போலீஸ் குடியிருப்பு,  டாக்டர் பெசண்ட்ரோடு, சென்னை-5
 
9) ஜெகதாம்பாள் சந்திரன் (7293 IGNOAPS 7411 )  4, ஐ போலீஸ் குடியிருப்பு, கரசன் இஸ்மித் ரோடு, கோபாலபுரம், சென்னை-86
 
10) சாந்தகுமாரி செல்லப்பன்  நம்பர்- 26 -சி, போலீஸ் குடியிருப்பு திருவான்மியூர், சென்னை-41
 
நீதிபதிகள் குடியிருப்பில் இருந்துகொண்டு ஓய்வூதியம் வாங்குபவர் பெயர்  மாணிக்கம் 1 ஏ, என்.சி.பி. குடியிருப்பு, நியூ ஜட்ஜ் குடியிருப்பு, கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ.புரம், சென்னை

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமைக்கழக முகவரியில் முதியோர் பென்சன் வாங்குபவரின் பெயர் அமிர்தம்.
 
-இது ஸாம்பிள்தான்.  சென்னை மாநகரத்தில், கிண்டி-மாம்பலம் தாசில்தார் அலுவலகத் துக்குட்பட்ட ஒரு ஏரியாவில் மட்டுமே இந்தளவுக்கு  அரசியல்வாதிகள்  தங்களின் ஓட்டரசியலுக்கு மக்களை   ஊழல்வாதியாக மாற்றியிருக்கிறார்கள் என்றால் தமிழகம் முழுவதும் எவ்வளவுபேர் அரசின் உதவித்திட்டத்தை மோசடியாக பெற்றுவருவார்கள்?  இப்படி மக்களே லஞ்ச ஊழலில் ஈடுபட்டால், கோடிகளில் ஊழல் செய்யும்  அரசியல்வாதிகளை எப்படி கேள்வி கேட்கவேண்டும் என்ற எண்ணம் வரும்?  மாபெரும் சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் குற்றவாளியாகி சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவை எதிர்க்கவேண்டியவர்கள் அவரை விடுவிக்கக்கோரி தீக்குளிப்பதும் உயிர்விடத்துணிவதும் என்னக்காரணம்?  மாதாமாதம் கிடைக்கு 1000 ரூபாய் லஞ்சத்துக்காக எத்தனை பேருக்கு லஞ்சம் கொடுத்திருப்பார்கள்?  இப்படி எந்த அரசியல்வாதியின் துணையோடு இந்த உதவித்தொகையை மாதாமாதம் பெற்றுவருகிறார்களோ அவர்களுத்தானே சாதகமாக இருப்பார்கள்?  உண்மையான ஏழை எளிய,  ஆதரவற்ற, வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளவர்கள் அரசின் உதவித்தொகையை பெறுவதில் எந்த தடையுமில்லை. ஏன்... உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும்கூட உயர்த்திக்கொடுக்கலாம். ஆனால், பொய்யானவர்களுக்கு கொடுக்கப்படுவது உதவித்தொகை அல்ல லஞ்சம். தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, காலமாக நமது ஓட்டுக்காக அரசியல்வாதிகள் கொடுக்கும் லஞ்சம். இப்படிப்பட்ட, வாக்காளர்கள் இருக்கும்வரை ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்துவிடலாம் என்ற எண்ணம் அரசியல்வாதிகளின் மனதிலிருந்து நீங்காது! வெள்ளப் பணத்தையும் இப்படித்தான் பாதிப்பு இல்லாதவர்களுக்கு லஞ்சமாக கொடுத்து ஓட்டுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ad

ad