புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2016

சம்பந்தனின் பதவியை பறிக்க மஹிந்த முயற்சி

ஜனா­தி­பதி, பிர­தமர் கன­வுகள் கலைந்­துள்ள நிலையில் சம்பந்­தனின் எதிர்க்­கட்சி ஆச­னத்­தை­யேனும் பறிக்கும் நோக்­கத்­தி­லேயே மஹிந்த
அணி­யினர் செயற்­பட்டு வரு­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் குழப்­பங்­களை மேற்­கொள்­ளவும், பயங்­க­ர­வாத கதை­களை பரப்­பவும் இதுவே காரணம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரிவித்தார்.
தாஎம்­மீது பொய்க்­குற்றம் சுமத்தி எதி­ரணி பலத்­தினை குறைக்க முயற்­சிக்­கின்­றனர். ஆனால் நாம் இருக்கும் வரையில் அதற்கு இட­ம­ளிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.எதிர்க்­கட்சி பத­விக்­காக தொடர்ச்­சி­யாக மஹிந்த அணி­யினர் போரா­டி­வரும் நிலை­யிலும், மக்கள் விடு­தலை முன்­னணி மீது சுமத்­தி­வரும்குற்­றச்­சாட்­டு­களின் பின்­னணி தொடர்­பிலும் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது தனது ஜனா­தி­பதி பத­வியை தக்­க­வைக்க பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மஹிந்த ராஜபக் ஷ மேற்­கொண்டார்.
அவ­ருடன் இருக்கும் அணி­யினர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் அனைத்தும் எம்மால் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தன. எனினும் ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது அவ­ரது சர்­வா­தி­கார ஜனா­தி­பதி பத­வியை தக்­க­வைக்க முடி­யாது போய்­விட்­டது. அதேபோல் அடுத்த பொதுத் தேர்­த­லின்­போதும் தன்னை பிர­த­ம­ராக்­கிக்­கொள்ள வேண்டும் என அவர் முயற்­சித்தார்.
சகல அர­சியல் மேடை­க­ளிலும் தன்னை பிர­த­ம­ராகக் வேண்டும் என்ற வகையில் கருத்­துக்­களை முன்­வைத்தார். ஆனால் பொதுத் தேர்­த­லின்­போதும் அவரால் பிர­த­மாக முடி­யாது போய்­விட்­டது. தான் மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வர­வேண்டும் என்ற கனவு நன­வா­க­வில்லை

ad

ad