புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2016

இந்தியாவில் இலங்கை அகதிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்

இந்தியாவின் ப ரமத்தி வேலூர் அருகே பரமத்தி இலங்கை அகதிகள் முகாமில் கடந்த இரண்டு மாதங்களாக உதவித்தொகை வழங்காததைக்
கண்டித்து, அகதிகள் திங்கள்கிழமை பரமத்தி – திருச்செங்கோடு வீதியை மறித்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வலையப்பட்டி அருகே மேட்டுப்பட்டியில் ஓர் இலங்கை அகதிகள் முகாமும், பரமத்தி வேலூர் அருகே பரமத்தியில் ஓர் இலங்கை அகதிகள் முகாமும் உள்ளன.
பரமத்தி இலங்கை அகதிகள் முகாமில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பத் தலைவர்களுக்கு 1000 ரூபாவும் (இந்திய ரூபா), 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு 750 ரூபாவும், 12 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 450 ரூபாவும் மாத உதவித்தொகையாக வழங்கப்படுகின்றன.
இந்த உதவித்தொகையை கடந்த இரண்டு மாதங்களாக வழங்காதது குறித்து முகாமைச் சேர்ந்தோர் வருவாய் ஆய்வாளர் மாயவனிடம் கேட்டுள்ளனர்.
அவர் உரிய பதில் கூறவில்லையாம்.
இதையடுத்து, பரமத்தி – திருச்செங்கோடு சாலையில் திடீர் மறியலில் இலங்கை அகதிகள் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பரமத்தி வேலூர் வட்டாட்சியர் லோகநாதன் நிகழ்விடத்துக்கு வந்து இலங்கை அகதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ad

ad