புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூன், 2016

ஒலிம்பிக் போட்டியில் போபண்ணாவுடன் ஜோடி சேருகிறார் லியாண்டர் பெயஸ்; அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவிப்பு


2016 ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டி வரும் ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி துவங்குகிறது. இதில், ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் மற்றும் ரோகன் போபண்ணா ஆகியோர் இணைந்து பங்கேற்பார்கள் என அகில இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால், போபண்ணா சாகேத் மைனெனியுடன் இணைந்து விளையாடவே விருப்பம் தெரிவித்து இருந்தார். அந்த கோரிக்கையை டென்னிஸ் சங்கம் நிராகரித்துள்ளது. அதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர்-1 வீராங்கனையாக (மகளிர் இரட்டையர் பிரிவு) திகழ்ந்து வரும் சானியா மிர்சாவுடன் இணைந்து போபண்ணா பங்கேற்கிறார்.

இம்மாத துவக்கத்தில் நடந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ் சாம்பியன் பட்டம் வென்றிருந்ததை சுட்டிக்காட்டியுள்ள டென்னிஸ் சங்கம் பெயஸூடன் போபண்ணா இணைந்து விளையாடினால் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்கு சிறந்த ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளது. 

ad

ad