புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2016

நாடாளுமன்றில் குழப்பம் சபை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு கூடிய நாடாளுமன்ற அமர்வில், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம் குறித்து விவாதிக்கப்படவிருந்தது.

குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கை மற்றும் கழுத்தில் கறுப்புப் பட்டிகளை அணிந்துவந்த ஒன்றிணைந்த எதிரணியினர், நாடாளுமன்றில் குழப்ப நிலையை தோற்றுவித்துள்ளனர். இந்நிலையிலேயே சபையை ஒத்திவைத்து அவசர கட்சித் தலைவர் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.

ad

ad