புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2016

யாழில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் உருவப்படம் பொறித்த துண்டுப் பிரசுரங்கள் ; பெண் கைது

யாழ்பாணம் மருதனார் மடப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம்
பொறித்த துண்டுப் பிரசுரத்தினை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் ஜேர்மனியில் இருந்து வந்த பெண் ஒருவர்  இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நாட்டில் இருந்து வந்து மருதனால் மடத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண்னே குறித்த சம்பவத்தில் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மருதனார் மடப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறித்ததும் , தேசிய தினங்கள், தேசிய சின்னங்கள் போன்றவை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டிருந்தன.
இது சம்மந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார்,  அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெரா ஒன்றில் உதவியுடன் குறித்த துண்டு பிரசுரங்களை ஒட்டியவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 40 வயது மதிக்கத்தக்க பெண் என்றும், ஜேர்மன் நாட்டில் இருந்து வந்தவர் என்றும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும், விசாரணைகள் முடிவில் அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ad

ad