நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் படம் மற்றும் கட்சியின் இலட்சினை பொறிக்கப்பட்ட மருந்து வழங்கும் துண்டு என்பன பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டமை தொடர்பில், பருத்தித்துறை நீதிமன்றில், பருத்தித்துறை பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். குறித்த வழக்கு, நேற்று பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மன்றின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதன்போது, வைத்தியசாலைக்கு துண்டுகளை வழங்கிய நபரை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு, நீதவான் உத்தரவிட்டார். மன்றில் ஆஜர்படுத்துமாறு, நீதவான் உத்தரவிட்டார்பதவிக்காலம் முடிவது எப்போது? - உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோருகிறார் மைத்திரி
|