புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2018

ஜ.தே.சு.முன்னணியின் எட்டு வேட்பாளா்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைவு!

அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் போட்டியிட்ட ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வாழைப்பழ சீப்பில் போட்டியிட்ட எட்டு வேட்பாளர்கள் நேற்று(06.02.2018) செவ்வாய்கிழமை தமிழ் முற்போக்கு கூட்டணியோடு இணைந்து கொண்டனர்.



நேற்றையதினம் கினிகத்தேன திலகாஸ் மண்டபத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்று இடம்பெற்று கொண்டிருந்த வேளை இந்த எட்டு வேட்பாளர்களும் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



ஜ.தே.சு.முன்னணியின் எட்டு வேட்பாளா்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைவு!



இதன் போது அமைச்சர்களான பழனி திகாம்பரம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்னண் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.



மலையக பெருந்தோட்ட மக்களுக்கு மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னேடுக்கும் நோக்கிலே மலை நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தோடு இணைந்து மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக ஜக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வாழைப்பழ சீப்பில் போட்டியிட்ட எட்டு வேட்பாளர்கள் நேற்றைய தினம் தமிழ் முற்போக்கு கூட்டணியோடு இணைந்து கொண்ட போதே இதனை குறிப்பிட்டனர்.

ad

ad