கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் புதிய களனி பாலத்துக்கானத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையின் காரணமாக, குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பேலியகொட சுற்றுவட்டத்திலிருந்து, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு உள்நுழையும் பகுதியானது, எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதனால் சாரதிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுத்துகொள்வதற்காக மாற்று வழிகளை உபயோகிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்