புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2018

2020 ஆகஸ்ட் மாதம் நாடா­ளு­மன்றத் தேர்தல்!

2020 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதமே  நாடா­ளு­மன்றத் தேர்தல் நடத்­தப்­படும்.
அதற்கு இடைப்­பட்ட காலத்தில் நாடா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்­கப்­போ­வ­தில்லை. ஜனா­தி­பதி தேர்­த­லையே முதலில்  நடத்­த­வேண்­டி­யது  அவ­சி­ய­மாகும் என்று  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.
நாட்டில் ஏற்­பட்­டுள்ள  அர­சியல்  நெருக்­கடி தொடர்பில்  அறி­வு­றுத்­து­வ­தற்­கா­கவும் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து   ஆராயும் நோக்­கிலும்  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின்    மாவட்ட  அமைப்­பா­ளர்­க­ளது  கூட்டம் நேற்று  அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்­றது. 
கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் நடை­பெற்ற இந்தக் கூட்­டத்தில் நாடாளு­மன்ற உறுப்­பி­னர்­களும்   அமைப்­பா­ளர்­களும் முக்­கி­யஸ்­தர்­களும் கலந்­து­கொண்­டனர். 
இங்கு உரை­யாற்­றிய ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
நம்­பிக்­கை­யில்­லாப் ­பி­ரே­ரணை நாடா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டும்­போது பெரும்­பான்மை பலம் இருந்தால் அதனை நிரூ­பிக்­கலாம். அதனை தவிர்த்து நாடா­ளு­மன்­றத்தைக் குழப்­பு­வ­தா­னது ராஜ­ப­க்ஷ­வி­ன­ருக்கு பெரும்­பான்மைப் பலம் இல்லை என்­பதை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.
நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வெற்­றி­பெற்­று­விட்­ட­தாக சபா­நா­யகர் அறி­வித்­த­தி­லி­ருந்து அமைச்­ச­ரவை கலைந்­து­விட்­டது. அதனால் பிர­த­ம­ருக்கு நிதி ஒதுக்­கீ­டு­செய்ய முடி­யாது. அந்த யோச­னையை ரவி கரு­ணா­நா­யக்க முன்­வைத்­தி­ருக்­கின்றார்.
நாம் நிய­மித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய தேசி­யக்­கட்­சியை தாக்­கி­யி­ருக்­கின்றார். எமது வாக்­குகள் இல்­லா­விடின் அவ­ரினால் ஜனா­தி­ப­தி­யா­கி­யி­ருக்க முடி­யாது.
ஒக்­டோபர் 26 ஆம் திகதி நடத்­தப்­பட்ட சம்­ப­வத்தின் பின்னர் இந்தப் பிரச்­சினை முடிந்­து­விடும் என அவர்கள் நினைத்­தனர். ஆனால் இந்தப் பிரச்­சினை ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு மட்­டு­மன்றி முழு­நாட்­டிலும் பாரா­ரிய பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.
எமது மக்­களின் வாக்­கு­க­ளினால் ஜனா­தி­ப­தி­யா­கிய ஒரு­வ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த செயற்­பாடு மக்­களின் இறை­மைக்கு விடுக்­கப்­பட்ட பாரிய அடி­யாகும். நாம் நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்தை பாது­காக்­கவே போரா­டு­கின்றோம்.
நாம் 19 ஆவது திருத்­தத்தை  வைத்து முன்­சென்றோம். அந்தத் திருத்­த­மா­னது மக்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­தி­யது. ஜனா­தி­ப­தியை நாடாளு­மன்­றத்­திற்கு பொறுப்­புக்­கூறும் ஒரு­வ­ராக மாற்­றினோம். ஆனால் நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­ப­தற்­காக நாம் ஜனா­தி­ப­தி­யாக நிய­மித்­தவர் இன்று நாடா­ளு­மன்­றத்தை மிதிப்­ப­தற்கு முற்­ப­டு­கின்றார். நாம் அதற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம் என்றார். 

ad

ad