சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரும், இந்திய துணைத் தூதுவரும், உயர்மட்ட அதிகாரிகளுடன் இணைந்து, சிறிலங்காவின்
பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவைச் சந்தித்து தனித்தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இந்தச் சந்திப்புகள், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளன.
இந்தியத் துணைத் தூதுவர் கலாநிதி ஷில்பக் அம்புலே தலைமையிலான இந்தியத் தூதரக உயர் அதிகாரிகள், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகரும் கலந்து கொண்டார்.