புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2018

மைத்திரி கொலை சதி- புதிய தகவல்கள் அடுத்த சில நாட்களில்!

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான சதி
முயற்சிகள் குறித்த முக்கிய தகவல்கள் சிலவற்றை அடுத்த சில நாட்களில் வெளியிடவுள்ளதாக  தயாசிறிஜெயசேகர தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் போது  முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன என தெரிவித்துள்ள தயாசிறிஜயசேகர இந்த தகவல்களை விரைவில் வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா  ஜனாதிபதி சிறிசேனவை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக  ஊழலுக்கு எதிரான அமைப்பின் நாமல் குமார தெரிவித்தமை சிறிலங்கா அரசியலில் பெரும்பரப்பரப்பை  ஏற்படுத்தியதும் இது தொடர்பில் இந்திய பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
பயங்கரவாத விசாரணைப்பிரிவின் முன்னாள் இயக்குநரான பிரதி காவல்துறைமா அதிபர் நாலக டி சில்வாவும் இது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ad

ad