இதன் மூலமே பௌத்தத்திற்கு முன்னுரிமை எனும் கருப்பொருளின் அடிப்படையில் திட்டங்களை வடகிழக்கில் முன்னெடுக்க முடியுமெனவும் அதற்கு தற்போது போன்று ஒத்துழைக்க கூடிய ஆளுநர்கள் தேவையென வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவி விலகளுக்கான கடிதங்களை, தான் உட்பட ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே வடமாகாண ஆளுநரின் பேரில் நடந்ததாக கூறப்படும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் மைத்திரியின் கவனத்திற்கு வந்துள்ளதாக புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.