இந்த தூக்குத் தண்டனையை இன்னும் இரண்டு மாதங்களில் முன்னெடுக்கப் போவதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். சிறிது காலம் நீக்கப்பட்டு மீண்டும் இலங்கையின் பொருளாதாரத்துக்கு உறுதுணையாக பல்வேறு பிரயத்தனங்களின் பின்னர் கிடைக்கப் பெற்ற இந்த விசேட சலுகை ஜனாதிபதியின் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தீர்மானத்தினால் இழக்கச் செய்யப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு அரச தொலைக் காட்சியில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் இந்த சலுகை 27 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு நீக்கப்பட்டிருந்தது. பின்னர் நல்லாட்சி அரசாங் காலத்தில் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.