புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மார்., 2019

மயிலிட்டியில் உள்ள வீடொன்றின் அத்திவாரத்தின் கீழிருந்து இரண்டு கண்ணிவெடிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்பு


இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மயிலிட்டி பகுதி யில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

மயிலிட்டி பகுதியில் உள்ள வீடொன்றின் அத்திவாரத்தின் கீழிருந்து இரண்டு கண்ணிவெடிகள் மற்றும் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டு உள்ளன.பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியில் மயிலிட்டி பகுதியில் மீள் குடியேறி த வீட்டினை சுற்றி மதில் மீள அமைக்கும் பணிக்காக ஏற்கனவே இருந்த மதில் அத்திபாரத்தை தோண்டிய போது , இரண்டு கண்ணிவெடிகளும் , நூல் சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு தொகை துப்பாக்கி ரவைகளும் கண்டெடுக்கப்பட்டன.

வீட்டு உரிமையாளர் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , பொலிஸார் வெடி பொருள் அகற்றும் பிரிவினருக்கு அறிவித்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதிகள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகிய நிலையிலும் அப்பகுதியில் ஆபத்தான வெடி பொருட்கள் காணப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

ad

ad