புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2019

யாழ்.கொக்குவிலில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! -3 வீடுகள் சேதம்-

யாழ்.கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.


3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 8 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டுத் தப்பித்தது என்று பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


வன்முறைக் கும்பல், வீடுகளின் கதவு, யன்னல்கள் உள்பட பெறுமதியான தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

ad

ad