முல்லைத்தீவு மணலாறு பகுதியில் சிங்கள மக்களுடனான “வடக்கையும் தெற்க்கையும் இணைக்கும் சகோதரத்துவத்தின் மக்கள் சந்திப்பு ” சந்திப்பு என்னும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகைதந்த விமல் வீரவன்ச குழுவினர் முன்னதாக கொக்கிளாய் விகாரை மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைந்துள்ள விகாரை என்பனவற்றுக்கு இரகசியமாக திடீர் விஜயம் மேற்கொண்டனர்.
இந்த திடீர் விஜயம் குறித்து ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் வினவியபோது கருத்துக்கள் எதையும் கூற மறுத்துவிட்டார்.